Friday, August 29, 2008

ஜாப் மோசடிகள்

நாம் அனைவரும் ஏதோவொரு விதத்தில் யாரிடமாவது ஏமாந்துகொண்டேதான் இருக்கிறோம், அதிலும் இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இதைவிட நல்ல ஜாப் கெடைக்காதா என்று நினைக்காதவர் கிடையாதென்றே சொல்லலாம், பலவிதமான மோசடிகள் நம்மால் பார்க்க, கேக்க முடிகிறது, 

நேற்று ஒரு நோட்டீஸ் நண்பர் ஒருவர் அனுப்பினார் , டிரைவர்கள் தேவை சவுதி அரேபியாவிற்கு, நண்பர் எனக்கு அனுப்ப, நான் மற்றவர்க்கு அனுப்ப, 

எனக்கே சந்தேகம் வந்து கால் செய்து விசாரித்தேன், எஸ், அவர்களுக்கு டிரைவர் தேவை, ஆனால் ஹவுஸ் டிரைவர்தான் தேவை, இதை அவர்கள் அதே நோட்டீஸ்'ல் மேன்சன் பண்ணி இருக்கலாம், நேரவிரயம் 

நெறைய பேருக்கு ஹவுஸ் டிரைவர்கும் கம்பெனி டிரைவருக்கும் வித்தியாசம் தெரியாது,

பல நண்பர்கள் வெளிநாடுகளில் மாட்டி முழி பிதுங்கி கொண்டிருக்கிறார்கள்,

எனக்கு குவைத் தம்பி ஒருவன் மிகவும் வேதனையான  விசயங்களை சொல்லுவான், 

சாப்ட தூங்ககூட விடமாட்டங்கன்னே , நைட் கூப்டு குப்பய கொட்ட சொல்லுவாங்க, 

காலைல 4 மணிக்கு எழுப்புவாங்க, சோறும் ஒண்ணும்  சொல்லிக்கற மாறி  போடா மாட்டங்க , அத சரியான டைம்கும் தரமாட்டாங்க , எப்போடா விடுவாங்கன்னு இருக்குன்னே என்பான், 

உடல்நிலை சரியில்லாதபோது வந்து ட்ராப்  பண்ணிட்டு போ என்பார்களாம்.

ஆனாலும் கடன் இருக்குன்னே ஒடனே போகவும் முடியாது, இப்டியே இருக்கட்டும்னே என்பான்.

வெளிநாட்டு பெரிய லெவல் வேலை தவிர்த்து இப்படி லேபர், டிரைவர் வேலைகளுக்கு வருபவர்கள் நம்பிக்கையான உறவினர்கள் தொடர்பிருந்தால் முயற்சிக்கலாம்.

லோக்கல் வேலைகள் அதைவிட மோசம், தினமும் நாலுமணி நேர வேலை , மாதம்  பத்தாயிரம் என்று சொன்னால், முடிந்தால் அந்த நோட்டீசை கிழித்துவிட்டு போங்கள், 

எனக்கு நூலகத்தில் பழகிய நண்பர் ஒருவர் சொன்னார், நீங்க ரொம்ப நல்லா பேசறீங்க, இந்த இடத்துக்கு போங்க மாசம் பத்தாயிரம் என்று ஒரு நம்பரை கொடுத்தார், வேலைப்பளுவில் நான் அதை மறந்திருக்க, என் நண்பர் என் அனுமதியில்லாமல் சம்பந்தப்பட்ட பத்தாயிரம் கம்பெனி ஓனருக்கு  என் நம்பரை கொடுத்திருக்கிறார்.

அவர் தொடர்பு கொண்டவுடனேயே, உங்களைபோல் எனேர்ஜிடிக் வாலிபர்கள்தான் எங்களுக்கு வேண்டும் ஒடனே வாருங்கள் என்று நாலைந்து முறை அழைத்து இருந்தார், 

நானும் வேரு  ஒரு நண்பரையும் இழுத்துக்கொண்டு அங்கே  ஒரு ஞாயிரு மாலை ஆஜரானோம்.

வந்து பேசியவர்கள் அனைவரும் சதுரங்கவேட்டை டீம் , கட்டம் கட்டி காசு வாங்கியதாக சத்தியம்   செய்கிறார்கள்.

வேலை ஒன்றும் இல்லை, பக்கத்து வீடு, எதிர்வீடு எல்லாம் போய்  காசு வங்கி இவர்களிடம் வந்து மளிகை வாங்கி கொடுத்தால், 1% பணம் நமக்காம் , 

அதாவது 1000 ரூபாய்க்கு பொருள் வாங்கினால் 10 ருபாய் எனக்கு, இது மாதிரி ஒருநாளுக்கு இவ்ளோ, வாரத்துக்கு , மாசத்துக்கு  என்று இவர்கள் சொன்ன கணக்கு எனக்கு தலை சுற்றி வந்தது,

எவ்வளவு பெரிய பித்தலாட்டம் இது, சென்னை போன்ற இடங்களில் பேச்சிலர்ஸ் நிலை படு மோசம் , நம்மை நம்பி எவன் பணம் தருவான் மளிகை வாங்க, 

எவ்வளவு முடியுமோ அவ்வளவு திட்டிவிட்டு வந்துவிட்டேன்.

இனி எங்கேயாவது நோட்டிசை பார்த்தால் , ஒடனே கிழிப்பதுதான் என் வேலையாயிருக்கிறது ... 


Sunday, August 24, 2008

Friday, August 8, 2008

Thursday, August 7, 2008


77


555




99


5555




j

அடர்த்தி இல்லாத தண்ணீர்


நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.

நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.
இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்., நிறமாகவும்., மணமாகவும் இருக்கும்.
இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.
இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில், கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன.
இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.
இதை உணவுக்கு மட்டுமின்றி.
குளியலுக்கும், மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டுவலியின்றி
கால்நடையாகவே சென்று வந்தனர்.
அதனால் தான் எல்லாம் அறிந்த நம்
முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் " என்று
சொன்னார்கள்.
வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil " என்று அழைக்கிறர்கள்.
ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள் எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.
சரி., ரீஃபைண்ட் ஆயில் எப்படி
தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போமா..?
மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள்.
பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கி விடுகிறார்கள்.
பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.
இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.
திரை மறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் " என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.
உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.
சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.
செக்கில் ஆட்டி எடுக்கப்படும் இயற்க்கையான எண்ணெய்யை சூடுப்படுத்தினால்...
அது ரசாயன கலவையாக மாறாது.
அதன் தாதுப் பொருள்கள் அப்படியே சிதையாமல் நமக்கு கிடைக்கும்.
எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள்.
ரசாயன பொருட்களால் பாழ்படுத்தப்பட்டு., உடல் ஆரோக்கியத்திற்க்கு அவசியமான பொருட்கள் நீக்கப்பட்ட ஒரு திரவத்தை ரீஃபைண்ட் ஆயில் என்ற பெயரில் விற்பனை செய்ய அரசாங்கமும்., மெடிக்கல் கவுன்சில்களும் எப்படி அனுமதி அளிக்கின்றன...?
நாமும் யோசிக்கும் சக்தியை ஏன் இழந்து விட்டோம்..?
நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பதினால் மட்டும் தான் காரணம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.
கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.
இதற்க்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது ரீஃபைண்ட் ஆயில்.