Friday, August 29, 2008

ஜாப் மோசடிகள்

நாம் அனைவரும் ஏதோவொரு விதத்தில் யாரிடமாவது ஏமாந்துகொண்டேதான் இருக்கிறோம், அதிலும் இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இதைவிட நல்ல ஜாப் கெடைக்காதா என்று நினைக்காதவர் கிடையாதென்றே சொல்லலாம், பலவிதமான மோசடிகள் நம்மால் பார்க்க, கேக்க முடிகிறது, 

நேற்று ஒரு நோட்டீஸ் நண்பர் ஒருவர் அனுப்பினார் , டிரைவர்கள் தேவை சவுதி அரேபியாவிற்கு, நண்பர் எனக்கு அனுப்ப, நான் மற்றவர்க்கு அனுப்ப, 

எனக்கே சந்தேகம் வந்து கால் செய்து விசாரித்தேன், எஸ், அவர்களுக்கு டிரைவர் தேவை, ஆனால் ஹவுஸ் டிரைவர்தான் தேவை, இதை அவர்கள் அதே நோட்டீஸ்'ல் மேன்சன் பண்ணி இருக்கலாம், நேரவிரயம் 

நெறைய பேருக்கு ஹவுஸ் டிரைவர்கும் கம்பெனி டிரைவருக்கும் வித்தியாசம் தெரியாது,

பல நண்பர்கள் வெளிநாடுகளில் மாட்டி முழி பிதுங்கி கொண்டிருக்கிறார்கள்,

எனக்கு குவைத் தம்பி ஒருவன் மிகவும் வேதனையான  விசயங்களை சொல்லுவான், 

சாப்ட தூங்ககூட விடமாட்டங்கன்னே , நைட் கூப்டு குப்பய கொட்ட சொல்லுவாங்க, 

காலைல 4 மணிக்கு எழுப்புவாங்க, சோறும் ஒண்ணும்  சொல்லிக்கற மாறி  போடா மாட்டங்க , அத சரியான டைம்கும் தரமாட்டாங்க , எப்போடா விடுவாங்கன்னு இருக்குன்னே என்பான், 

உடல்நிலை சரியில்லாதபோது வந்து ட்ராப்  பண்ணிட்டு போ என்பார்களாம்.

ஆனாலும் கடன் இருக்குன்னே ஒடனே போகவும் முடியாது, இப்டியே இருக்கட்டும்னே என்பான்.

வெளிநாட்டு பெரிய லெவல் வேலை தவிர்த்து இப்படி லேபர், டிரைவர் வேலைகளுக்கு வருபவர்கள் நம்பிக்கையான உறவினர்கள் தொடர்பிருந்தால் முயற்சிக்கலாம்.

லோக்கல் வேலைகள் அதைவிட மோசம், தினமும் நாலுமணி நேர வேலை , மாதம்  பத்தாயிரம் என்று சொன்னால், முடிந்தால் அந்த நோட்டீசை கிழித்துவிட்டு போங்கள், 

எனக்கு நூலகத்தில் பழகிய நண்பர் ஒருவர் சொன்னார், நீங்க ரொம்ப நல்லா பேசறீங்க, இந்த இடத்துக்கு போங்க மாசம் பத்தாயிரம் என்று ஒரு நம்பரை கொடுத்தார், வேலைப்பளுவில் நான் அதை மறந்திருக்க, என் நண்பர் என் அனுமதியில்லாமல் சம்பந்தப்பட்ட பத்தாயிரம் கம்பெனி ஓனருக்கு  என் நம்பரை கொடுத்திருக்கிறார்.

அவர் தொடர்பு கொண்டவுடனேயே, உங்களைபோல் எனேர்ஜிடிக் வாலிபர்கள்தான் எங்களுக்கு வேண்டும் ஒடனே வாருங்கள் என்று நாலைந்து முறை அழைத்து இருந்தார், 

நானும் வேரு  ஒரு நண்பரையும் இழுத்துக்கொண்டு அங்கே  ஒரு ஞாயிரு மாலை ஆஜரானோம்.

வந்து பேசியவர்கள் அனைவரும் சதுரங்கவேட்டை டீம் , கட்டம் கட்டி காசு வாங்கியதாக சத்தியம்   செய்கிறார்கள்.

வேலை ஒன்றும் இல்லை, பக்கத்து வீடு, எதிர்வீடு எல்லாம் போய்  காசு வங்கி இவர்களிடம் வந்து மளிகை வாங்கி கொடுத்தால், 1% பணம் நமக்காம் , 

அதாவது 1000 ரூபாய்க்கு பொருள் வாங்கினால் 10 ருபாய் எனக்கு, இது மாதிரி ஒருநாளுக்கு இவ்ளோ, வாரத்துக்கு , மாசத்துக்கு  என்று இவர்கள் சொன்ன கணக்கு எனக்கு தலை சுற்றி வந்தது,

எவ்வளவு பெரிய பித்தலாட்டம் இது, சென்னை போன்ற இடங்களில் பேச்சிலர்ஸ் நிலை படு மோசம் , நம்மை நம்பி எவன் பணம் தருவான் மளிகை வாங்க, 

எவ்வளவு முடியுமோ அவ்வளவு திட்டிவிட்டு வந்துவிட்டேன்.

இனி எங்கேயாவது நோட்டிசை பார்த்தால் , ஒடனே கிழிப்பதுதான் என் வேலையாயிருக்கிறது ... 


No comments: